General16 June 2026

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை கேடயமாகப் பயன்படுத்தி பேச்சுரிமையை முடக்குவதாக காவல்துறைக்கு கண்டனம்!

இலங்கையின் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகிய குடிமக்களுக்கு எதிராகக் காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் செயற்பட்டு வருவதாக 'தினன தகுண' கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் கீழ், சுயாதீன நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி வழக்குத் தொடரவோ அல்லது அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவோ காவல்துறைக்கு எந்தவொரு சட்ட ரீதியான ஏற்பாடுகளும் இல்லை என அந்த கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

பொதுமக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் விசேட சட்டத்தைச் தீவிரமாகப் பயன்படுத்தி, குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையானது, சட்டக் கண்ணோட்டத்தின்படி மிகத் தெளிவாகச் சட்டத்தை வளைப்பதும், துஷ்பிரயோகம் செய்வதும் ஆகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்ட வழிமுறையானது, இங்கு காவல்துறையின் தணிக்கைக்கான ஓர் ஆயுதமாக சட்டவிரோதமான முறையில் மாற்றப்பட்டுள்ளது என்றே அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

சமீபகாலமாக அரசியல் செல்வாக்கின் கீழ் இயங்குவது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் சிவில் குடிமக்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து,"நீதிமன்ற அவமதிப்பு" போன்ற குற்றச்சாட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறை செயல்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விவாதத்திற்குரிய அரச அதிகாரியாக இருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானிக்கு எதிராக எழும் பொது மக்கள் விமர்சனங்களைத் தடுப்பதற்காக, நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் சட்டத்தை ஒரு கேடயமாக குற்றப்புலனாய்வு திணைக்களம் பயன்படுத்த முனைகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டுக்குப் பொருத்தமானவை அல்ல, மாறாக ஒரு காவல்துறை அரசுக்கே பொருத்தமானவை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இந்த நடவடிக்கை கடுமையாகக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, குடிமக்களின் கருத்து வெளிப்பாடுகளைக் பழிவாங்கும் நோக்கில் காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பயன்படுத்தும் விதத்தை அருவருப்புடன் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் தேவைகளுக்காகக் காவல்துறை குடிமக்களின் உரிமைகளை நசுக்கும் ஒரு கருவியாக மாறுவது ஜனநாயகத்தின் வீழ்ச்சியையே குறிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களைச் செயல்படுத்துவதற்காகக் காவல்துறை அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒரு சிவில் சமூகம் என்ற ரீதியில் தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் தினன தகுண கூட்டமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes