General17 June 2026

நானுஓயா - பதுளை தொடருந்து சேவைகள் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட, மலையக தொடருந்து பாதையின் நானுஓயா மற்றும் அம்பேவெல ஆகிய நிலையங்களுக்கு இடையிலான சேதமடைந்த தொடருந்து மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மலையக தொடருந்து மார்க்கத்தின் நானுஓயா முதல் பதுளை வரையிலான பிரிவில் தொடருந்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) முதல் விசேட கால அட்டவணையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மார்க்கத்துடனான தொடருந்து இயக்கத்தை சுமுகமான முறையில் மீண்டும் முன்னெடுப்பதை உறுதி செய்வதற்காக, திருத்தப்பட்ட கால அட்டவணையின் கீழ் சேவைகளை நடத்துவதற்குத் தொடருந்து திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதேவேளை, மலையக தொடருந்து மார்க்கத்தில் ரம்புக்கனை மற்றும் நானுஓயா ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட பல சேதமடைந்த பகுதிகளில் இன்னமும் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த பிரிவுகளின் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes