General18 June 2026

மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு 'அம்பர்' எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்'எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலைக்கு மாறக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes