General19 June 2026

குஷ் ரக போதைப்பொருளுடன் இலங்கை பயணி கட்டுநாயக்கவில் கைது

தாய்லாந்தில் இருந்து 75 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்'ரக போதைப்பொருளை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 41 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் என தெரியவந்துள்ளது.

வானூர்தி நிலையத்தின் Green Channel வழியாக போதைப் பொருளை கடத்த முயன்ற போதே அவர் கைதானார்.

குறித்த நபரிடமிருந்து 7.5 கிலோகிராம் குஷ்'ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes