General19 June 2026

அம்பலாங்கொடையில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்!

அம்பலாங்கொடை, ஊரவத்தை பகுதியில் உள்ள ரஜமஹா விகாரையின் ஊர்வலம் நாளை சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, காலி - கொழும்பு பிரதான வீதியின் அம்பலாங்கொடை பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் ஊரவத்தை சந்தியிலிருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், காலி வீதி வழியாகச் சென்று, ஹிரேவத்தை புத்தர் சிலைக்கு அருகாமையால் பிரதான வீதி ஊடாக அம்பலாங்கொடை நகரைச் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர், இந்த ஊர்வலம் மீண்டும் அதே சந்தி வழியாக ஊரவத்தை பகுதியை சென்றடையவுள்ளதால், காலி - கொழும்பு பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் நாளை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes