General22 June 2026

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

"அஸ்வெசும" நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகள் நாளை (23) முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 270,025 குடும்பங்கள் நிதிப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.

இதற்கமைய, தகுதிபெற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 3.28 பில்லியனுக்கும் அதிகமான தொகை நாளை முதல் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes