General23 June 2026

2027 முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்க புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக, முறைகேடுகளைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய விசேட சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கே அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்களும் ஆலோசனைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையின் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு:

நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல்.

மாணவர் சேர்க்கையின் போது முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணுதல்.

சேர்க்கை செயல்முறைகளின் போது இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் அநீதிகளை முற்றாகக் குறைப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை வகுத்தல்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை புதிய கல்வி மறுசீரமைப்பின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பல முக்கிய நிறுவனங்களின் கருத்துக்களும் யோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இப்புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அவை வருமாறு,

கையூட்டல்; மற்றும் ஊழல்கள் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள்.

இந்த ஆலோசனைகள் மற்றும் புதிய விதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபமானது, வரும் 2027 ஆம் ஆண்டு தொடக்கம் அதன் பின்னர் தொடர்ந்து வரும் காலங்களில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes