International23 June 2026

இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் தங்களது இறையாண்மை உரிமைகளை முழுமையாக மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என ஓமானும் ஈரானும் தெரிவித்துள்ளதாக ஓமான் செய்தி முகவரகம் குறிப்பிட்டுள்ளது.

மஸ்கட்டில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை ஒரு பாதுகாப்பான மற்றும் திறந்த நீர்வழிப்பாதையாகப் பேணுவதற்குக் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes