உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று (24) இடம்பெறவுள்ளது.
இந்த மனுவானது கடந்த ஜூன் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வித அடிப்படையும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்து பிரதிவாதிகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.
Latest News
அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதிக்கு திடீர் சுகயீனம்
Local
24 June 2026
சாரதி பயிற்சி நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை: உரிமம் இல்லாத பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
Local
24 June 2026
அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை
Local
24 June 2026
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
Local
24 June 2026
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது
Local
24 June 2026
இன்றைய தங்க நிலவரம் : ஒரு பவுண் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
Local
24 June 2026
அதிவேக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மூன்று நாள் விசேட நடவடிக்கை
Local
24 June 2026
"மலையக மக்கள் நாட்டுக்கு 300 பில்லியன் டொலர் ஈட்டித் தந்துள்ளனர்; காணிகள் 10 பேர்ச் ஆக உயர்வு!" – அமைச்சர் சமந்த வித்யாரத்ன!
Local
24 June 2026
"6 மாதங்களாக 10 மக்கள் மனுக்களில் கையெழுத்திடாமல் சபாநாயகர் என்ன செய்கிறார்?" – நாடாளுமன்றத்தில் கேள்வி!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் : சந்தேகநபரான காதலனின் மனைவியும் கைது
Local
24 June 2026