General24 June 2026

"6 மாதங்களாக 10 மக்கள் மனுக்களில் கையெழுத்திடாமல் சபாநாயகர் என்ன செய்கிறார்?" – நாடாளுமன்றத்தில் கேள்வி!

பொதுமக்களின் பிரச்சினைகள் அடங்கிய 10 முக்கிய மனுக்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சபாநாயகரின் அலுவலகத்தில் கையெழுத்திடப்படாமல் தேங்கிக் கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் மனுக்கள் நாடாளுமன்ற செயலகக் குழுவினால் சரிபார்க்கப்பட்டு, சபாநாயகரின் ஒப்புதலுக்காகவும் கையெழுத்திற்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 6-7 மாதங்களாக இவை சபாநாயகரின் அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டார்.

மேலும், "இந்த மனுக்களுக்கு என்ன நடந்தது என்று பொதுமக்கள் என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?" என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து சபையில் பதிலளித்த சபாநாயகர், குறித்த மனுக்கள் ஏன் இன்னும் கையெழுத்திடப்படாமல் தாமதமாகி வருகின்றன என்பது குறித்து தான் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes