General24 June 2026

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: ஜூலை 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய நீதிமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக கருத்துகளை முன்வைத்தார்.

இதன்பின்னர், இந்த மனு மீதான மேலதிக விசாரணை மற்றும் சமர்ப்பணங்கள் வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes