இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்புத் திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நடைபெற்ற, இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அனர்த்த அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2,026 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வீடுகள் வழங்கப்படவுள்ளன.
மீதமுள்ள வீடுகள் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் தகுதியான தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 22 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பெருந்தோட்டங்களின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 4 இலட்சம் ரூபாவையும் நிதிப் பங்களிப்பாக வழங்கியுள்ளன.
இந்த நிலையில், வீடமைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளைத் தாமதமின்றி விடுவிக்குமாறும், பொருத்தமான ஏனைய காணிகளை அடையாளம் காண்பதற்குத் தேவையான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி
Local
25 June 2026
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது: தியாகராஜா நிரோஷ் கண்டனம்
Local
25 June 2026
ஜூலை 1 முதல் பேருந்து கட்டண திருத்தம் - தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை!
Local
25 June 2026
மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
25 June 2026
இலங்கை - இந்திய வர்த்தகத்தில் புதிய புரட்சி: 'ரூபாய் - ரூபாய்' வர்த்தகம் மூலம் 2 வருடங்களில் 40 வீத வளர்ச்சி இலக்கு!
Local
25 June 2026
அஸ்வெசும நலன்புரித் திட்டம் - வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கே முன்னுரிமை
Local
25 June 2026
செக் குடியரசை 3-0 என வீழ்த்தி மெக்சிக்கோ அபார வெற்றி
Local
25 June 2026
விஜயதாசவின் மகன் ரகித மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது
Local
25 June 2026
தென்கொரியாவை 1-0 என வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!
Local
25 June 2026
இந்திய உதவியிலான மலையக வீடமைப்புத் திட்டம்: இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய உத்தரவு
Local
25 June 2026