General26 June 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கலனிகம மற்றும் டொடங்கொட பரிமாற்றங்களுக்கு இடையே இடம்பெற்ற வாகன விபத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நெடுஞ்சாலையின் 30 கிலோமீட்டர் அருகே இடம்பெற்ற இந்த விபத்தில், இரண்டு பேருந்துகள், இரண்டு சிற்றுந்துகள் மற்றும் ஒரு ஜீப் என மொத்தம் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்து காவல்துறை, விபத்தினால் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விபத்து காரணமாக மாத்தறை நோக்கிய பயணப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், தற்போது காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளால் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes