International27 June 2026

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் ஒப்பந்த மீறலுக்கு ஈரானின் கடும் எச்சரிக்கை

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய், அமெரிக்காவுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றத்தை உருவாக்கி அமெரிக்கா, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் 5-வது விதியாகும். ஆனால், அமெரிக்கா அங்கு தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி ஒப்பந்தத்தின் இந்த விதியை மீறியுள்ளதாக ரெசாய் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எந்தவொரு விதியையும் மீறினால், அதற்கு ஈரான் வழங்கும் பதில் "மிக விரைவானதாகவும் தீர்மானமிக்கதாகவும்" இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதில் உறுதியாக இருந்தாலும், தனது இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்த விதிகளுக்கு முரணாகச் செயல்படும் அமெரிக்காவின் செயலை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes