General28 June 2026

மீண்டும் துடுப்பெடுத்தாடும் இலங்கை: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்குமா?

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நோர்த் சவுண்ட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தனது முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி, தற்போது மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 303 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 626 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அமிர் ஜங்கு 233 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரோஸ்டன் சேஸ் 194 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கையின் மிலான் ரத்நாயக்க 5 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ மற்றும் சொனால் தினுஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போதைய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்க (28 ஓட்டங்கள்) மற்றும் கசுன் ராஜித (4 ஓட்டங்கள்) ஆகியோர் ஆடுகளத்தில் இருந்தனர்.

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சு தரப்பில் ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes