General29 June 2026

வெனிசுவேலாவில் 6,80,000 குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை - யுனிசெப் எச்சரிக்கை

வெனிசுவேலாவில் கடந்து புதன்கிழமை நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து, சுமார் 6,80,000 குழந்தைகள் மனிதாபிமான உதவிகளின் தேவை நிலையில் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

நிலஅதிர்வினால் மொத்தம் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் கூறுகையில், மருத்துவமனைகள் நோயாளிகளைக் கையாள முடியாத அளவிற்கு நெருக்கடியில் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes