General29 June 2026

மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் (29) நாளையும் (01) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

பொசன் பூரணை காரணமாக ஊர்வலம் செல்வதால் இந்த போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொந்தெனிய அசோகராம விகாரையில் பொசன் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, இன்று (29) மாலை 7:00 மணி முதல் கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியின் ஒரு பகுதி மூடப்படும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்துகின்றனர்.

மேலும், ரத்மலை பகுதியில் ஊர்வலம் நடைபெறுவதால், ரத்மலை, ரதம்பல மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

வலஸ்கலவில் உள்ள ஸ்ரீ ஜெயவர்தன முச்சலிந்தராம விகாரையில் பொசன் ஊர்வலம் நாளை மறுநாள் காலை 10:00 மணி முதல் நடைபெறுவதால், வலஸ்கல, பெலியத்த, திக்வெல்ல மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes