2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டின் தகுதிச் சுற்றுகள் மற்றும் அணிகளைத் தேர்வு செய்வதற்கான அளவுகோல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இன்று (29) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு இடங்கள் கண்டங்கள் வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதற்காக 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு 20 தரவரிசை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி, அந்தந்த கண்டங்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தகுதியுள்ள நான்கு அணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, ஆசியாவில் உயர்மட்ட தரவரிசையில் இருக்கும் அணி நேரடித் தகுதியைப் பெறும்.
பெண்கள் பிரிவுக்கான தகுதி
பெண்கள் பிரிவில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் வெவ்வேறு கண்டங்களிலிருந்து தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் முதல் நான்கு அணிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
இதில் அவுஸ்திரேலியா (ஓஷானியா), தென் ஆபிரிக்கா (ஆபிரிக்கா) மற்றும் இங்கிலாந்து (ஐரோப்பா) ஆகியவை தகுதிக்கு நெருக்கமாக உள்ளன.
பிரித்தானியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதால், அந்த நாட்டுக்காக இங்கிலாந்து மட்டுமே ஒதுக்கீட்டுப் பட்டியலில் கருதப்படும்.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அமெரிக்கா
மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், அது பல கரீபியன் நாடுகளின் கூட்டு அமைப்பாக இருப்பதால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரம் பெற்ற தனித்துவமான தேசிய ஒலிம்பிக் குழுவாக (NOC) கருதப்படாது.
எனவே, அந்த அணியால் நேரடியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.
அதேபோல், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஐசிசி தரவரிசையில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு இடத்தைப் பெறும்.
இறுதி தகுதிச் சுற்று
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறாவது இடத்தைத் தீர்மானிக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 'இறுதி ஒலிம்பிக் உலகளாவிய தகுதிச் சுற்று' தனித்தனியாக நடத்தப்படும்.
இதில் ஐசிசி தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறாத அடுத்த எட்டு உயர்மட்ட அணிகள் மோதும்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றால், அந்தப் பிராந்தியத்தில் எந்தத் நாடு ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பதைத் தீர்மானிக்க பிரத்யேகமாக 'மேற்கிந்திய தீவுகள் பிராந்திய தகுதிகாண் சுற்று' ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்யும்.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.
ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு இடங்கள் கண்டங்கள் வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதற்காக 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு 20 தரவரிசை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதன்படி, அந்தந்த கண்டங்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தகுதியுள்ள நான்கு அணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, ஆசியாவில் உயர்மட்ட தரவரிசையில் இருக்கும் அணி நேரடித் தகுதியைப் பெறும்.
பெண்கள் பிரிவுக்கான தகுதி
பெண்கள் பிரிவில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் வெவ்வேறு கண்டங்களிலிருந்து தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் முதல் நான்கு அணிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
இதில் அவுஸ்திரேலியா (ஓஷானியா), தென் ஆபிரிக்கா (ஆபிரிக்கா) மற்றும் இங்கிலாந்து (ஐரோப்பா) ஆகியவை தகுதிக்கு நெருக்கமாக உள்ளன.
பிரித்தானியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதால், அந்த நாட்டுக்காக இங்கிலாந்து மட்டுமே ஒதுக்கீட்டுப் பட்டியலில் கருதப்படும்.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அமெரிக்கா
மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், அது பல கரீபியன் நாடுகளின் கூட்டு அமைப்பாக இருப்பதால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரம் பெற்ற தனித்துவமான தேசிய ஒலிம்பிக் குழுவாக (NOC) கருதப்படாது.
எனவே, அந்த அணியால் நேரடியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.
அதேபோல், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஐசிசி தரவரிசையில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு இடத்தைப் பெறும்.
இறுதி தகுதிச் சுற்று
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறாவது இடத்தைத் தீர்மானிக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 'இறுதி ஒலிம்பிக் உலகளாவிய தகுதிச் சுற்று' தனித்தனியாக நடத்தப்படும்.
இதில் ஐசிசி தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறாத அடுத்த எட்டு உயர்மட்ட அணிகள் மோதும்.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றால், அந்தப் பிராந்தியத்தில் எந்தத் நாடு ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பதைத் தீர்மானிக்க பிரத்யேகமாக 'மேற்கிந்திய தீவுகள் பிராந்திய தகுதிகாண் சுற்று' ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்யும்.
Latest News
எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 106 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!
Local
29 June 2026
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் தகுதிச் சுற்று அளவுகோல்களை வெளியிட்டது ஐசிசி!
Local
29 June 2026
துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!
Local
29 June 2026
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு
Local
29 June 2026
கட்டாரில் பேச்சுவார்த்தையென ட்ரம்ப் அறிவிப்பு : மறுக்கும் ஈரான்!
Local
29 June 2026
லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு
Local
29 June 2026
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கம் : வட மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Local
29 June 2026
தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை - மாவட்ட ரீதியாக அறிக்கை கோரல்
Local
29 June 2026
மாத்தறை - திக்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
Local
29 June 2026