தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஹப்புத்தளையில் குளவி தாக்குதல் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
30 June 2026
கழிப்பறை குழி தோண்டியபோது சிக்கிய தொல்பொருட்கள்? - ஒருவர் கைது!
Local
30 June 2026
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு
Local
30 June 2026
ஜூன் 2026: பணவீக்கம் 6.8 சதவீதமாக அதிகரிப்பு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
Local
30 June 2026
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவுக்கு பிணை
Local
30 June 2026
புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷியாமில பெரேரா, கைது
Local
30 June 2026
மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் அளுத்கம தொடருந்து நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு
Local
30 June 2026
iPhone 18 Pro தொடர்பான மிகப்பெரிய தகவல் கசிவு!
Local
30 June 2026
அரசாங்கத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் - தனியார் பேருந்து சங்கம்!
Local
30 June 2026
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது
Local
30 June 2026