General02 July 2026

கெஹெல்பத்தர பத்மே விவகாரம்: சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அழைப்பு!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமாகக் கருதப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவரிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes