அரசாங்கம் அடுத்த கட்டமாக நாட்டின் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக சூழலை நிலைப்படுத்துவதற்கே அரசாங்கம் முதலிடம் கொடுத்ததாகக் கூறினார்.
அத்துடன் 'மெட்ரோ பேருந்து' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) மேலும் 800 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், புதிய மருத்துவப் பீடங்களை நிறுவுதல் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குதல் போன்ற எதிர்காலத் திட்டங்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை இல்லை என குறிப்பிட்ட அமைச்சர், காலாவதியான நிர்வாக நடைமுறைகளும், தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையுமே சில திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகக் கூறினார்.
இதற்கமைய அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இதற்குத் தீர்வு காணப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Latest News
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
29 July 2026
மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!
Local
29 July 2026
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026
மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்
Local
29 July 2026