General05 July 2026

அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த போதுமான நிதி அரசாங்கத்திடம் உள்ளது - பிமல் ரத்நாயக்க

அரசாங்கம் அடுத்த கட்டமாக நாட்டின் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக சூழலை நிலைப்படுத்துவதற்கே அரசாங்கம் முதலிடம் கொடுத்ததாகக் கூறினார்.

அத்துடன் 'மெட்ரோ பேருந்து' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) மேலும் 800 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், புதிய மருத்துவப் பீடங்களை நிறுவுதல் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குதல் போன்ற எதிர்காலத் திட்டங்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதிப் பற்றாக்குறை இல்லை என குறிப்பிட்ட அமைச்சர், காலாவதியான நிர்வாக நடைமுறைகளும், தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையுமே சில திட்டங்களைத் தாமதப்படுத்துவதாகக் கூறினார்.

இதற்கமைய அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இதற்குத் தீர்வு காணப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்    ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்  குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.   உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.  ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர்  தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30)  அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது.  ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும்  உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார்.  இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர்...
Read more
Hiru TV News | Programmes