General07 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக விசேட விசாரணையொன்றை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளையும் பின்னணிகளையும் கண்டறிவதற்காக, விரிவான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (6) நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்றிருந்தது.

எனினும், அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த சில தினங்களுக்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, இந்த சம்பவம் குறித்த முழு அளவிலான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes