General08 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன.

அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes