General13 July 2026

திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 முதல் காலாவதியான நிலையில்!

திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 ஆம் ஆண்டு முதல் காலாவதியான நிலையில் இருப்பதாக, இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு, அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவம் குறித்து ஆராயும் போதே இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.

குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் குறித்த கூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்புக்குச் சென்ற இந்தச் சம்பவம், இணையக் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என அரசாங்க நிதி பற்றிய குழு உறுதி செய்துள்ளது.

இது குறித்த விரிவான அறிக்கையை குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் குறித்த மோசடி தொடர்பான கண்டறிதல்கள் மட்டுமன்றி, எதிர்காலத்திற்கான முக்கிய பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related recommendation
Hiru TV News | Programmes