International14 July 2026

யேமனின் அனைத்து வானூர்தி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடல்

யேமனின் தலைநகரான சனா (Sanaa) வானுர்தி நிலையத்திற்குச் சென்ற ஈரானிய வானுர்தி ஒன்றைக் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசு, நாட்டின் அனைத்து வானுர்தி நிலையங்களையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.

யேமனின் சிவில் வானூர்தி போக்குவரத்து மற்றும் வானிலை ஆய்வு அதிகார சபை (CAMA) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்த விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஈரானிய வானூர்தி ஒன்று சனா நகருக்குள் தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த ஈரானிய வானுர்தி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி (Houthi) போராளிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes