General14 July 2026

வடமேல் மாகாண தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!

வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் அந்த மாகாண பாடசாலைகளில் 6 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணைப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனம், அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கோட்ட அலுவலகங்களுக்கு விடுவிப்பதில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மையே இதற்குக் காரணமாகும்.

இதற்கமைய, இப்பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஜே.ஏ.எம்.பி. ஜயதிலக்க அறிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட பரீட்சை கால அட்டவணை இன்றைய தினம் வழங்கப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes