General14 July 2026

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நபர்களின் நலன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் முழு நாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.

இத்தகைய முக்கிய தீர்மானங்களை எடுக்கும்போது, துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.

மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழலில், இவ்வாறான நடைமுறைகள் சாதாரண ஊழியர்களுக்கு இழைக்கும் பாரபட்சமாகவே அமையும்.

அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நிர்வாக மாற்றமும் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மக்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes