நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த மோதலில் கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வன்முறை தொடங்கிய விதம்
கடந்த ஜூலை 5 ஆம் திகதி, A1 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லே கம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்ய நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதையடுத்து, அவர் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை விடுதி திறக்கப்பட்டவுடன், அந்த கைதி A2 விடுதிக்குள் புகுந்து மற்ற கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதே இந்த விரிவான வன்முறைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் இரு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகளைத் தாக்கிய கைதிகள்
வன்முறை சிறைச்சாலை முழுவதும் பரவிய நிலையில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.
வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து 89 அவசரகால மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மறுநாள் (6) காலை உணவளிப்பதற்காக அதிகாரிகள் உள்ளே சென்றபோது, "நாங்கள் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம்" என கைதிகள் மிரட்டியுள்ளனர். காலை 10.30 முதல் 10.50 வரை நிலைமை மோசமடைந்து, கைதிகள் கற்கள், மரக்கட்டைகள் மற்றும் இரும்புத் தண்டுகளைக் கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உள்ளே இருந்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலை அமைப்பு பற்றி தெரிந்திருந்ததால் அவர்கள் தப்பித்தாலும், கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் வழி தெரியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
மோதலின் போது சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதி கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளது.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி நீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கண்ணீர்ப்புகை மற்றும் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் சுடப்பட்டும் கைதிகள் அடங்காததால், விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்து சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டனர்.
சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரகத் துப்பாக்கி, அதன் தோட்டாக்கள் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது அதிகாரிகளிடம் இருந்த 60 துப்பாக்கிகளும் தடயவியல் பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி (CCTV) பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கொலைக் குற்றம் (தண்டனைச் சட்டக்கோவை 296), ஆயுதச் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன.
கைதிகள் அனைவரும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வன்முறை தொடங்கிய விதம்
கடந்த ஜூலை 5 ஆம் திகதி, A1 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லே கம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்ய நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதையடுத்து, அவர் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை விடுதி திறக்கப்பட்டவுடன், அந்த கைதி A2 விடுதிக்குள் புகுந்து மற்ற கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதே இந்த விரிவான வன்முறைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் இரு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகளைத் தாக்கிய கைதிகள்
வன்முறை சிறைச்சாலை முழுவதும் பரவிய நிலையில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.
வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து 89 அவசரகால மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மறுநாள் (6) காலை உணவளிப்பதற்காக அதிகாரிகள் உள்ளே சென்றபோது, "நாங்கள் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம்" என கைதிகள் மிரட்டியுள்ளனர். காலை 10.30 முதல் 10.50 வரை நிலைமை மோசமடைந்து, கைதிகள் கற்கள், மரக்கட்டைகள் மற்றும் இரும்புத் தண்டுகளைக் கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உள்ளே இருந்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலை அமைப்பு பற்றி தெரிந்திருந்ததால் அவர்கள் தப்பித்தாலும், கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் வழி தெரியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
மோதலின் போது சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதி கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளது.
ஒரு கட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி நீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கண்ணீர்ப்புகை மற்றும் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் சுடப்பட்டும் கைதிகள் அடங்காததால், விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்து சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டனர்.
சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரகத் துப்பாக்கி, அதன் தோட்டாக்கள் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் போது அதிகாரிகளிடம் இருந்த 60 துப்பாக்கிகளும் தடயவியல் பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி (CCTV) பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கொலைக் குற்றம் (தண்டனைச் சட்டக்கோவை 296), ஆயுதச் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன.
கைதிகள் அனைவரும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Latest News
அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!
Local
15 July 2026
சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்
Local
15 July 2026
பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஸ்பெயின்!
Local
15 July 2026
கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலானது - 20 போர்க்கப்பல்கள் களத்தில்: ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!
Local
15 July 2026
தாதியர்களின் ஓய்வு வயது வரம்பை 2 வருடங்களால் நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Local
15 July 2026
மோசடியாளர்களிடமே வங்கிக் கணக்கை உறுதிப்படுத்திய அதிகாரிகள்! - நாடாளுமன்ற அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
Local
15 July 2026
உண்மையான விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் - வசந்த சமரசிங்க
Local
14 July 2026
2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் குறித்து AI மாதிரிகளின் முக்கிய பதிவு!
Local
14 July 2026
ஈரான் தவிர ஏனைய நாடுகளின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
Local
14 July 2026
ஹோர்முஸ் நீரிணைக்கான 20% கட்டணம் ரத்து: வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை - ட்ரம்ப் அறிவிப்பு
Local
14 July 2026