General15 July 2026

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பரீட்சைக்குப் பதிவு செய்ய முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை, அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு அதிபர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes