General18 July 2026

பயத்தின் உச்சகட்டம்: சந்திரசேகரின் 'கூட்டுச் சாம்பார்' விமர்சனத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான தளம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்திருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

சந்திரசேகரின் இந்த விமர்சனம் "பயத்தின் உச்சகட்டம்" என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இந்தத் தளம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவோ அல்லது ஆட்சியை மாற்றுவதற்காகவோ உருவாக்கப்படவில்லை என்றும் மாறாக, தமிழ் பேசும் மக்களின் இனப்பொதுவான பிரச்சினைகள் மற்றும் நில அபகரிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes