International24 July 2026

அமெரிக்கா பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும் : எச்சரிக்கும் ஈரான்

தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் "கள யதார்த்தங்களைப்" புறக்கணித்துவிட்டு, 2028 தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது 'எக்ஸ்' தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அணுகுமுறை ஜனாதிபதி ட்ரம்புக்குப் பாதகமாகவே முடியும்.

அதிகாரிகள் பரிந்துரைக்கும் இந்த அறிவற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை, ஜனாதிபதி; டிரம்ப் எட்ட முயற்சிக்கும் ஒப்பந்தத்திற்காக அவர் மிகப்பாரிய விலையைக் கொடுப்பதை மட்டுமே உறுதி செய்யும்,"என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes