நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சுரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவொன்று எடுக்கப்படவுள்ளதுடன், பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அரசியல் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை தொடர்பான எதிர்ப்புகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் ,
நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர்,
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறையை சீரமைப்பது தொடர்பாகவும், மாணவர்களின் நலன் சார்ந்த மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அரசியல் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை தொடர்பான எதிர்ப்புகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் ,
நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர்,
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறையை சீரமைப்பது தொடர்பாகவும், மாணவர்களின் நலன் சார்ந்த மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
முன்னாள் காதலருடன் மீண்டும் சேர லட்சக்கணக்கில் செலவிடும் பெண்கள்: போலி ஒன்லைன் சேவைகள்
Local
24 July 2026
குழந்தைக் கடத்தல் வழக்கில் 19 பேருக்குத் தண்டனை: சிங்கப்பூரில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கேள்வி
Local
24 July 2026
"அப்பா நீங்கள் விலைமதிப்பற்றவர்...": தந்தைக்கு மகன் கொடுத்த மறக்க முடியாத இன்ப அதிர்ச்சி!
Local
24 July 2026
ஜப்பானின் புதிய பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவு
Local
24 July 2026
ஸிம்பாப்வேயைச் சுருட்டிய இந்தியா - அணித்தலைவராக முதல் வெற்றியைப் பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
Local
24 July 2026
கூகுள் கடவுச்சொல் மறந்துவிட்டதா? செல்ஃபி காணொளி மூலம் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய வசதி அறிமுகம்
Local
24 July 2026
அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு அரைகாற்சட்டை அனுமதி
Local
24 July 2026
5 முறை செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை - இறுதியில் தாயான நடிகை பகிர்ந்த வலி நிறைந்த அனுபவம்
Local
24 July 2026
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
Local
24 July 2026
ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள்
Local
24 July 2026