இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான நால்வரும் சமூக வலைதளங்களில் காணொளிகளை வெளியிட்டு, தங்களது திருமணம் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.
Latest News
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 2 சந்தேகநபர்கள் கைது!
Local
25 July 2026
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Local
25 July 2026
ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!
Local
25 July 2026
கலிபோர்னியாவில், பார்வையற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறிய ஆந்தை ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Local
25 July 2026
பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
25 July 2026
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026