பாலியல் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில், கரீம் கானை தலைமை வழக்கு தொடுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
2021-ல் ஐசிசியின் மூன்றாவது வழக்கு தொடுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட கான், கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் இந்த முடிவு, 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகளின் ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐசிசியின் இளநிலை பெண் ஊழியர் ஒருவருடன் முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதன் மூலமும், குறித்த பெண் தனது முறைப்பாட்டை தொடர்வதைத் தடுக்க முயன்றதன் மூலமும், கரீம் கான் கடமையில் கடுமையான மீறல் மற்றும் கடுமையான முறைகேடு செய்ததாக நீதிமன்றத்தின் மேற்பார்வைக் குழு கடந்த ஜூன் மாதம் கண்டறிந்தது.
எனினும் தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கான் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறார்.
அத்துடன் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிமுறைகள் மூலமாகவும் இந்த முடிவின் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை எதிர்த்து சவால் விடுப்பதாக அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.
இந்தநிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை வழக்கு தொடுநருக்கு என்னென்ன சட்ட வழிகள் எஞ்சியுள்ளன என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
வாக்கெடுப்பிற்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், கானைப் பதவியிலிருந்து நீக்க வாக்களித்த 125 உறுப்பு நாடுகளைக் கொண்ட உறுப்பு நாடுகளின் பேரவையின் சிறப்பு அமர்வின் முடிவை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மரியாதைக்குரிய பணிச்சூழலைப் பேணுவதற்கு நீதிமன்றம் தொடர்ந்து மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்," என்றும் ஐசிசி தமது அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த முழு செயல்முறையும் ஒரு தனிப்பட்ட வழக்கு தொடுநரின்; தலைவிதியைத் தாண்டிச் செல்கிறது, மேலும் இது உலகின் ஒரே நிரந்தரப் போர்க்குற்றத் தீர்ப்பாயத்தையே மறுவடிவமைக்கக்கூடும்.
இந்த முறைகேடு விசாரணை, அந்த நிறுவனத்தைக் கடுமையான வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது,
அதற்குள் இருக்கும் பிளவுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் ஐசிசியை முழுவதுமாகப் பலவீனப்படுத்தவும், உண்மையில் கலைக்கவும் முன்னுதாரணமற்ற ஒரு பிரசாரத்துடன் அரங்கேறியுள்ளது.
இந்தநிலையில் தற்போதைய முடிவு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பலவீனமடைந்து, மிகக் கடுமையான உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனைக் குறைத்துவிடும் என்பதே அதன் ஆதரவாளர்களிடையே உள்ள அச்சமாகும்.
பிரபல பிரித்தானிய சட்டத்தரணியான கான், 2025 மே மாதம் முதல் இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காகத் தானாக முன்வந்து விடுப்பில் இருந்து வருகிறார்.
சட்டத்தரணிகள் தரநிலைகள் சபை தனது சொந்த விசாரணையை நடத்தும் வரை ஒரு இடைக்காலத் தடையை விதித்ததைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் சட்டத்தரணி தொழில் செய்வதிலிருந்து கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை காஸாவில் இஸ்ரேலிய அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐஊஊ) விசாரணை தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைகளின் கீழ், அவர் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற நேற்றைய வாக்கெடுப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
அவர் பதவி நீக்கப்பட்ட போதிலும், இந்த சர்ச்சை இத்துடன் முடிவடைய வாய்ப்பில்லை.
இந்த முடிவு, நீதிமன்றத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய மிகவும் நுட்பமான ஒரு செயல்முறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 மே மாதத்தில்;, கான் ஒரு பெண் ஊழியருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், ஒரு மூன்றாம் தரப்பினரால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐஊஊ) தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திர மேற்பார்வை அமைப்பு (IOM) ஒரு விசாரணையைத் தொடங்கியது, ஆனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்; விசாரணைகளில் பங்கேற்க மறுத்ததால், அந்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது.
இந்த விசாரணை தவறாகக் கையாளப்பட்டதாகவும், இது சுதந்திர மேற்பார்வை அமைப்பின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிட்டதாகவும் இந்த செயல்முறையின் விமர்சகர்கள் வாதிட்டனர்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று புலனாய்வாளர்கள் இறுதியில் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், 2024 ஒக்டோபரில் இரண்டாவது பரிந்துரை செய்யப்பட்டது.
பின்னர் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உள் மேற்பார்வை சேவைகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
அது, பாலியல் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது ஒரு விரிவான விசாரணையை நடத்தியது.
அந்த விசாரணை நவம்பர் 2024 முதல் டிசம்பர் 2025 வரை நடைபெற்றது. அது 5,000 பக்கங்களுக்கும் மேலான சான்றுகளையும் சாட்சியங்களையும் உருவாக்கியது.
அதன்பின், கானின் நடத்தை கடுமையான முறைகேடா, குறைவான கடுமையான முறைகேடா, அல்லது முறைகேடே இல்லையா என்று ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் கண்டுபிடிப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது அசாதாரணமான அழுத்தம் நிலவும் ஒரு காலகட்டத்தில், பரந்த அரசியல் பதற்றங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.
காஸா போருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்களுக்காக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராகக் கைது பிடியாணைகளை கோரிய கானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில், பொதுவாக நீதிமன்றத்தின் மீதான வோஷிங்டனின் அணுகுமுறை விரோதமாகி வருகிறது.
இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று அது கூறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) "செங்கல் செங்கலாக" தகர்ப்பதற்காக, அமெரிக்கா ஒரு புதிய "முழு அரசாங்க" பிரசாரத்தை ஆரம்பித்தது.
அத்துடன், விசா தடைகள், சொத்து முடக்கங்கள் மற்றும் நட்பு நாடுகளை நீதிமன்ற உறுப்புரிமைமையில் இருந்து விலகுமாறு அல்லது தங்கள் நாட்டு மக்கள் மீதான அதன் அதிகார வரம்பை நிராகரிக்குமாறு இராஜதந்திர அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டையும் அமெரிக்கா முன்னெடுத்தது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகியவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லை.
இருப்பினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடுகளின் எல்லைக்குள், குறித்த நாட்டு மக்களால் செய்யப்படும் குற்றங்கள் மீது அந்த நீதிமன்றம் தமது அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026
மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு யுவதிகள் மீது மோதிய காவல்துறை உயரதிகாரி கைது!
Local
26 July 2026
தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்!
Local
26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!
Local
26 July 2026
தெய்வேந்திரமுனை ஊர்வலத்தில் காவடி ஆட்டத்தை இடைநிறுத்தமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்!
Local
26 July 2026
64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல் - கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருவர் கைது!
Local
26 July 2026
பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?
Local
26 July 2026
சீனாவில் மரபணு திருத்த சோதனையில் 6 வயது சிறுமி பலி; உண்மையை மறைத்த விஞ்ஞானி!
Local
26 July 2026