ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் (Volker Turk) பதவிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதிகப்படியான வாக்குகளால் ஒப்புதல் அளித்துள்ளது.
193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.
முன்னதாக, வோல்கர் டர்க்கின் பதவிக் காலத்தை 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் மாற்றுக் முன்மொழிவுக்குப் பெரும்பாலான நாடுகள் எதிராக வாக்களித்தன.
அதேநேரம், கடந்த காலத்தில் வோல்கர் டர்க்குடன் நெருக்கமாகப் பணியாற்றியவரும், வரும் டிசம்பர் மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளவருமான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் முடிவடையும் டர்க்கின் பதவிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீ;டிக்குமாறு முன்மொழிந்திருந்தார்.
Latest News
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது
Local
25 July 2026
சீன நாட்டவரின் மரணம் : சீன நாட்டவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 July 2026
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026