General25 July 2026

லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை

லங்கா பிரீமியர் லீக்கில் நடந்ததாகக் கூறப்படும் போட்டி நிர்ணயம் தொடர்பான விசாரணையில், ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவு தனது ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ எப்கிரேவ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் சுதந்திரத் தலைவர் சுமதி தர்மவர்தன ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஏ.எஸ்.பி. சனக டி சில்வா ஆகியோரைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது நடைபெற்று வரும் விசாரணை மற்றும் ஐசிசியின் சாத்தியமான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போட்டிகளை நிர்ணயம் செய்ய வீரர்களைத் தூண்ட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா மற்றும் மற்றொரு இந்தியர் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 9.5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடர்வதால், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் புலனாய்வு ஆதரவு உள்ளிட்ட ஐசிசியின் ஒத்துழைப்பை அமைச்சர் கமகே நேற்றைய சந்திப்பின்போது கோரியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes