போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து சீன நாட்டவர் ஒருவரைக் கடத்திச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சீன நாட்டவர் இரண்டு பேரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சீன நாட்டவரின் உடல், எஹெலியகொடவின் வனப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று சீன நாட்டினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக அதிகாலை வேளையில் வாடகைச் சிற்றுந்து ஒன்றில் கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு இரண்டு வாகனங்களில் சென்ற மற்றொரு சீனக் குழுவினர், அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் தாங்கள் பயணித்த வாகனங்களில் ஒன்றை துறைமுக நகர வாகனத் தரிப்பிடத்திலேயே கைவிட்டுச் சென்றதாகவும், பின்னர் அந்த வாகனத்திலிருந்து காற்றுத் துப்பாக்கி (Air rifle) ஒன்று மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத மதுபானச் சோதனை நடத்துவதற்காக எஹெலியகொட கரந்தன பகுதிக்குச் சென்றிருந்த எஹெலியகொட காவல்துறையினர் குழு, அருகிலுள்ள காடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பாறைக் குவியல் ஒன்றைக் கண்டுள்ளது.
அதில் இருந்து மனிதக் கையின் ஒரு பகுதி வெளியில் தெரிந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலதிக விசாரணையில், அந்த உடல் எச்சங்கள் சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமானவை என்பது உறுதி செய்யப்பட்டன.
பின்னர், அவை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டவருடையது என்றும் அடையாளம் காணப்பட்டன.
பின்னர், அவை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டவருடையது என்றும் அடையாளம் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்த உடல் நேற்று முன்தினம் பிற்பகல் அவிசாவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே வாகனம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் உடலைக் கொண்டு செல்ல சந்தேகநபர்கள்; அதைப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இரண்டு சீன நாட்டவர்கள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடலோரக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.
அத்துடன் சீன நாட்டினருக்கு இடையேயான இந்த மோதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 9 பேர் விளக்கமறியலில்!
Local
26 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
26 July 2026
சிறந்த விடயங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் - முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ஜெய்!
Local
26 July 2026
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை!
Local
26 July 2026
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்!
Local
26 July 2026
ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!
Local
26 July 2026
ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!
Local
26 July 2026
எபோலா வைரஸ் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 கடந்தது!
Local
26 July 2026
ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!
Local
26 July 2026