செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 2 செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 5 செயற்கைக்கோள்களை, ‘லிஜியான்-1 வை15’ (Lijian-1 Y15) கேரியர் ரொக்கெட் (Rocket) மூலம் சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தோங்பெங் வர்த்தக விண்வெளி மையத்திலிருந்து நேற்று இந்த ரொக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு விரிவாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதில் 'ஜிதியான் ஸ்டார் ஏ-04' (Jitian Star A-04) என்ற செயற்கைக்கோள், தன்னியக்க AI மாதிரிகள் மூலம் விண்வெளியில் தன் செயல்பாடுகளைத் தானே நிர்வகிக்கும் திறன் கொண்டதாகும்.
அதேபோல் 'செங்குவாங்-2 03' (Xiguang-2 03) என்ற செயற்கைக்கோளில் 3 AI வானிலை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது திடீர் சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்க உதவும்.
வழக்கமான வானிலை செயற்கைக்கோள்கள் தரவுகளைப் பூமிக்கு அனுப்ப 90 நிமிடங்கள் வரை எடுக்கும் நிலையில், இந்த AI செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்யும்.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ‘திரீ-பாடி கம்ப்யூட்டிங் கான்ஸ்டலேஷன்’ (Three-Body Computing Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டிற்குள் 100 AI செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தோங்பெங் வர்த்தக விண்வெளி மையத்திலிருந்து நேற்று இந்த ரொக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு விரிவாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதில் 'ஜிதியான் ஸ்டார் ஏ-04' (Jitian Star A-04) என்ற செயற்கைக்கோள், தன்னியக்க AI மாதிரிகள் மூலம் விண்வெளியில் தன் செயல்பாடுகளைத் தானே நிர்வகிக்கும் திறன் கொண்டதாகும்.
அதேபோல் 'செங்குவாங்-2 03' (Xiguang-2 03) என்ற செயற்கைக்கோளில் 3 AI வானிலை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது திடீர் சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்க உதவும்.
வழக்கமான வானிலை செயற்கைக்கோள்கள் தரவுகளைப் பூமிக்கு அனுப்ப 90 நிமிடங்கள் வரை எடுக்கும் நிலையில், இந்த AI செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்யும்.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ‘திரீ-பாடி கம்ப்யூட்டிங் கான்ஸ்டலேஷன்’ (Three-Body Computing Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டிற்குள் 100 AI செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கலிபோர்னியாவில், பார்வையற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறிய ஆந்தை ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Local
25 July 2026
பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
25 July 2026
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026
போராட்டத்தைக் கைவிட்டது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
Local
25 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!
Local
25 July 2026
ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!
Local
25 July 2026
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026