General25 July 2026

போராட்டத்தைக் கைவிட்டது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

இந்திய மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தங்களது அமைப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால், தங்களது போராட்டத்தை நிறைவு செய்வதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பேச்சாளர் சௌரவ் தாஸ், நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த போராட்டத்தை மீளப்பெறுவதாக கூறினார்.

மேலும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழி வரைவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்குச் செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்களது அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அமைதியான முறையில் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அமைப்பின் மற்றொரு பேச்சாளரான அசுதோஷ் ரங்கா வலியுறுத்தியுள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்குதல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதிருத்தல் ஆகிய கோரிக்கைகள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes