General27 July 2026

நாட்டில் இதுவரை 82,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆகப் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 47 பேர் பெண்கள் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலை செல்லும் வயதுடைய 6 சிறுவர்களும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes