General26 July 2026

பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தீயானது போர்டோ (Bordeaux) நகரை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, ஸ்பெயினிலும் காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது அவசரகால உதவிப் பொறிமுறையைச் செயற்படுத்தி, பிரான்ஸுக்கு மேலதிக மீட்புப் படைகள் மற்றும் தீயணைப்பு வானூர்திகளை அனுப்பி வைத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes