General27 July 2026

கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச்சுட்டெண் 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும், அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் போதுமானளவு நீரை அருந்துதல்.

முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல்.

முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல்.

திறந்தவெளிகளில் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes