General28 July 2026

தீவிரமடையும் டெங்கு - இந்த மாதத்தில் மாத்திரம் 30 பேர் உயிரிழப்பு

நாட்டில் பதிவான 61 டெங்கு மரணங்களில் 30 மரணங்கள் இந்த மாதத்தில் மட்டுமே பதிவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 500 புதிய நோயாளர்களுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக நிதியுதவி வழங்க உள்ளதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் இதற்கான நிதியை வழங்கவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes