General28 July 2026

தீவிரமடையும் டெங்கு - இந்த மாதத்தில் மாத்திரம் 30 பேர் உயிரிழப்பு

நாட்டில் பதிவான 61 டெங்கு மரணங்களில் 30 மரணங்கள் இந்த மாதத்தில் மட்டுமே பதிவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 500 புதிய நோயாளர்களுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக நிதியுதவி வழங்க உள்ளதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் இதற்கான நிதியை வழங்கவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்    ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்  குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.   உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.  ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர்  தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30)  அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது.  ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும்  உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார்.  இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர்...
Read more
Hiru TV News | Programmes