International28 July 2026

மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!

உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் சர்வதேச நிதி உதவி 18 சதவீதம் குறைந்து 7.3 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது.

இது கடந்த இரண்டு தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் மற்றும் நிதி நிறுத்தங்கள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைத் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையான நிதியுதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மீண்டும் கிடைக்கப்பெறாவிட்டால், கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes