இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறுசீரமைப்புக் குழுவினருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படக்கூடிய ஆதரவுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Latest News
விஜய்க்குப் பின் தனுஷும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
பேபி பவுடர் புற்றுநோய் குற்றச்சாட்டு வழக்குகள் : 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஜொன்சன் & ஜொன்சன்!
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026
விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு பிணை
Local
28 July 2026