General28 July 2026

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்துகின்றது.

குறித்த திருத்தச் சட்டமூலம் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes