General28 July 2026

உகண்டாவில் எபோலா தொற்றுக்கு முற்றுப்புள்ளி?

உகண்டாவில் சமீபத்தில் பரவிய எபோலா வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ் பரியோமுன்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மே மாத நடுப்பகுதியில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்றால் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 15 பேர் அண்டை நாடான கொங்கோ ஜனநாயக குடியரசைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தத் தொற்றின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் கொங்கோ ஜனநாயக குடியரசைச் சேர்ந்தவர்களாவர்.

மீதமுள்ள 18 பேரும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைப்படி, உள்ளூர் நாட்டைச் சேர்ந்த கடைசி நோயாளி கடந்த ஜூன் 16ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியதிலிருந்து, கட்டாயமான 42 நாள் கண்காணிப்பு காலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே உகண்டா எபோலாவிலிருந்து மீண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் வசிக்கும் பழம் தின்னும் வௌவால்கள் இந்த வைரஸின் இயற்கை மூலங்களாக இருப்பதால், நாடு தொடர்ந்து இதுபோன்ற தொற்றுகளுக்கு இலக்காகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தலைவலி, இரத்த வாந்தி எடுத்தல், தசை வலி மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

நாடு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes