General28 July 2026

உகண்டாவில் எபோலா தொற்றுக்கு முற்றுப்புள்ளி?

உகண்டாவில் சமீபத்தில் பரவிய எபோலா வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ் பரியோமுன்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மே மாத நடுப்பகுதியில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்றால் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 15 பேர் அண்டை நாடான கொங்கோ ஜனநாயக குடியரசைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தத் தொற்றின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் கொங்கோ ஜனநாயக குடியரசைச் சேர்ந்தவர்களாவர்.

மீதமுள்ள 18 பேரும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைப்படி, உள்ளூர் நாட்டைச் சேர்ந்த கடைசி நோயாளி கடந்த ஜூன் 16ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியதிலிருந்து, கட்டாயமான 42 நாள் கண்காணிப்பு காலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே உகண்டா எபோலாவிலிருந்து மீண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் வசிக்கும் பழம் தின்னும் வௌவால்கள் இந்த வைரஸின் இயற்கை மூலங்களாக இருப்பதால், நாடு தொடர்ந்து இதுபோன்ற தொற்றுகளுக்கு இலக்காகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தலைவலி, இரத்த வாந்தி எடுத்தல், தசை வலி மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

நாடு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Related recommendation
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்    ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்  குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர்.   உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது.  ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர்  தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30)  அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.  படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது.  ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும்  உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார்.  இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர்...
Read more
Hiru TV News | Programmes